tamilnadu

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே?

சென்னை, மே 31-பிரதமர் மோடி இரண்டாம் முறையாக பதவியேற்ற நிலையில் அவரோடு புதிய அமைச்சர்களும் பதவி யேற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில், தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமைபிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார் மோடி. ஆனால் அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட ‘உயர்’ சாதியினரே அதிகம்இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மோடியின் அமைச்சர வையில் சமூகநீதி எப்படி இருக்கிறது என்றுஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வெள்ளியன்று மே 31 தனது பேஸ்புக் பக்கத்தில்ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில் அமைச்சர்களைசமுதாய ரீதியாக பட்டிய லிட்டுள்ளார்.அதன்படி, பதவியேற்ற 58 அமைச்சர்களில் உயர் சாதியினர் - 32, பிற்பட்ட வகுப்பினர் -13, பட்டியல் இனத்தவர் - 6, பழங்குடியினர் - 4, சீக்கியர் - 2, இஸ்லாமியர் - 1 எனத்தெரிவித்துள்ளார் நீதிபதி அரிபரந்தாமன்.“ஒருவருக்கு ஒரு வாக்குஎன சம வாய்ப்பு பேசும் அரசியல்தளத்தில், மக்கள் தொகையில் சுமார் 50-60ரூ உள்ள பிற்பட்ட வகுப்பின ருக்கு 13அமைச்சர்கள், சுமார் 10-15ரூஉள்ள உயர் சாதியினருக்கு32அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்கள் ஆன தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்), சுமார் 14ரூ உள்ள இஸ்லாமியருக்கு 1 அமைச்சர் என்பதே நிதர்சன உண்மை.அனைவருக்கும் சம வாய்ப்புஎப்போது?” என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்கேள்வியை எழுப்பியி ருக்கிறார்.

;